Tuesday, July 8, 2008

யானை

செயல்பாடு பேனைப் போலாயினும்
சிந்தனை என்னவோ யானையை போல தான ....

பாகன் பாராப் பூகம்பம்
பார் பார்த்த பிரம்மாண்டம்
பராக்ரமம் படைத்த பொறுமைசாலி
அங்குசம் தாண்டாப் பத்தினி
அறைப்பணத்திக்கு ஆசிர்வாதமுமுண்டு
அறண்டால் ஆயிரம் தலையும் கீழுண்டு
பூகம்பத்தை முன் உணரும் அறிவுமுண்டு
பூமிப்பந்தை உதைத்தாடும் பலமுமுண்டு
பயம் அறியா பயங்கரம்
மரம் இழுக்கும் பரிதாபம்
மாமிசமுன்னா மாமிச மலை
மழலையரும் ரசிக்கும் மா மலை


கலர் படத்தில் வரும் பிளாக் & ஒயிட் நீ
சேற்று கலர் பூசும் பிளாக் & ஒயிட் நடிகனும் நீ


மமூத்தின் evolutionary remain நீ


நிற பேதம் இல்லா நிரந்தரம் நீ
ஆம். கண்டம் தாண்டினாலும்
நீ மட்டும் நிறம் மாறா பூ தானே


உன் பொறுமையை சோதிப்பார்கள் உன்
மயிரை பிடுங்கி - மோதிரம் செய்ய


ஆயிரம் கொன்ற பரணிக்கு பல்லக்கு
அதில பாதி கூட kollallayae ஏன்யா
வீரப்பனுக்கு ஆப்பு


தும்பிக்கும் நம்பிக்கை கொடுக்க உன் கையை தும்பிக்கையும் என்பார்
கயவர்கள். காசு கொடுத்து துதி பாட பழக்கியதால் துதிக்கையும் என்பார்.

தும்பிக்கையோ thudhikkaiyyo
பின்னாடி யான உதைக்க வருதுடா ..... தப்பிச்சிடுடா .......


Monday, July 7, 2008

எழுத்து

என்ன எழுதுவது என்ற எண்ணம் எழுந்த போது எந்த எண்ணமும்
எழாததால் எழுத்தையே எழுதலாம் என்று எண்ணியதால் வந்த எழத்து.
எழத்து
ஓசையின் வரைபடம்
எண்ணத்தின் இரட்டை பரிமாண விளக்கம்
சிந்தனையை கூடு விட்டு கூடு பாய்ச்சும் ஊடகம்.
பேனா முனை ஆடிய நர்த்தனம்
எழுத்தாணி சென்ற பாதை
மைத்தொட்ட மயிர்பீலிக்கு கைகள் இட்ட கட்டளை
அறிந்தவனுக்கு புரிகின்ற அர்த்தம்
அறியாதவனுக்கு புரியாத ஓவியம்
வெற்று காகிதத்திற்கு ஆணி கொடுத்த அணிகலன்
காது கேளும் ஊமையின் மொழி
காகிதத்தின் விலை மதிப்பின் பின்னணி
எப்படி?

சுய சிந்தனையில் எட்டியது அன்றி
பிற சிந்தனையை வெட்டி ஒட்டியது அல்ல
இத என்கேந்துடா சுட்டுருக்க போற என்று
சிலர் சிரிப்பது காதுக்கு எட்டினாலும்
இதையும் படிச்சிட்டாகய்யா என்று வடிவேலு ஸ்டைல்ல
சொல்லிகிட்டே அடுத்ததையும் எளுதுவோமில்ல ......