Monday, May 16, 2011

nivaaranam

இங்கொன்றும் மாட மாளிகைகளும் கூட கோபுரங்களும்  இருந்ததில்லை....
ஆனால் ஒண்டி ஒளியக் குடிசைகளுண்டு
கோழி போல குஞ்சு பொரித்து வாழ்ந்து வந்தோமே ...
அது பொறுக்கவில்லையோ ...

இங்கொன்றும் அறுசுவை உணவளிக்கும் ஆனந்த பவனோ , pizza கார்னெர்-ஒ
இருந்திடவில்லை ....
ஆனால் பிச்சை எடுக்காமல் கூழ் காச்சி உண்டு  வந்தோமே ....
அது பொறுக்கவில்லையோ ....

இங்கொன்றும் சந்தனமரமோ ஜவ்வாதுவோ  இருந்திடவில்லை....
ஆனால் ரத்த வாடை இன்றி வாழ்ந்து வந்தோமே ...
அது பொறுக்கவில்லையோ ......

இங்கொன்றும் நித்தமும் பூபாளம் பாடி பொழுது புலர்ந்ததில்லை.
ஆனால் ஒரு நாளும் ஓராயிரம் மக்களின் ஒருமித்த  
ஒப்பாரி கேட்டு விழித்ததில்லையே....
அது பொறுக்கவில்லையோ .....

இங்கொன்றும் பட்டுடுத்தி  யாரும் வாழ்ந்திடவில்லை.
ஆனால் அரைத்துணி இன்றி அம்மணமாய் அலைந்திட்டோர் யாருமில்லை.
அது பொறுக்கவில்லையோ....

இது ஒன்றும் வேங்கை இல்லா, மான்கள் மட்டுமே  வாழும் பூமி அல்ல.
ஆனால் அளவாய் வேங்கைகளும் ஆங்காங்கே கூட்டமாய் மான்களுமாய்
வாழ்ந்தோமே ....
அது பொறுக்கவில்லையோ .....

யார் வேண்டி போரிட்டாய் வேந்தே ....
புலியா
இல்லை புலியின் பெயரால் தமிழ் இனமா?

நீரொன்றும் கடுவுள்ளில்லை. அது தெரியும் எமக்கு...
ஆனால் செந்நாய் கூட்டமென்று நினைத்திடவில்லை ...

இனி வாழ்ந்து காட்டிட  வழி இல்லை என்று தெரியும் எமக்கு.
ஆனால் செத்திட மாட்டோம் என்றிருந்தோமே
இப்படி எஞ்சி இருந்த நடை பிணங்களுக்கு ஊடே வல்லூறு விட்டு
வேடிக்கை பார்த்தாயே ....
எங்கள் சாவு கூட நல்ல சாவாக இருந்திடப்பொருக்கவில்லையோ உமக்கு.

இதற்கு பிறகும், நீ இட்ட திசை நோக்கி கூட்டம் கூட்டமாய் நடந்தோமே ...
அங்கொன்றும் சொர்க்கம் இருந்திடாதென்று தெரியும் எமக்கு.
ஆனால் மயானக்காடு வாய் பிளந்து காத்திருக்கும் என்று நினைத்திடவில்லையே...

 
இப்போது  அண்டை நாடுகளிடம் எதற்கு கேட்கிறாய் நிவாரண நிதி ?
வாழ்வாதாரம் பாதித்தவனை வாழ்விக்கத்தானே நிவாரணம்.
மயானக்காடுகளை அழகு படுத்தவல்லவே....


No comments: