Monday, May 16, 2011

muranbaadugal

காரில் அமர்ந்த படியே சுலோகம் சொல்கிற ஓட்டுனர்
பரம கடவுள் பக்தர்...

ரோட்டின் இருபுறமும் தேடுவது ... போலிசை...ரெட் சிக்னலில் ...

-------------
தீண்டாமை ஒழிப்பு போராட்டம் அங்கே ...
எதற்கு???
தீண்டாமை தீண்டிவிட்டதாம் .....
-------------
சமுதாய சம நீதி கோரி போராட்டம் ....
போராட்ட முடிவில் , மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
தங்கள் ஜாதியை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க மனு...
-------------
பிளாஸ்டிக் எளிதில் அழியாது.
பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்போம்.
காகிதம் உபயோகிப்போம்.
வெப்ப மயமாவதிலிருந்து உலகை காப்போம்...
இது போன்ற அச்சடித்த காகித அட்டைகள்  ( மரங்களின் மரணத்தில்)  தாங்கி சென்ற கூட்டம்.
...

வழிபோக்காளிகளில் ஒருவர் - மழை வர மாதிரி இருக்கே. அட்டை எல்லாம் நெனஞ்சு ஊறிட போகுதுய்யா.
இன்னொருவர் - இல்ல இல்ல. எல்லாம் கரெக்டா லேமினேட் பண்ணி இருக்காங்க. நான் அப்பவே பாத்துட்டேன் ....
-----------
வரி ஏற்றம் ஒரு புறம் ...
இலவசங்கள் மறு புறம்...
--------
இலவச அரிசி ...
வேலையில்லாமல் சம்பளம் ..நூறு நாள் சம்பளத்திட்டம் ...
கேளிக்கைக்கு கலர் டிவி...
தமிழர்கள் பணக்கார பிச்சைக்காரர்கள்...
செயலாக்கம் - மக்கள் சுய மரியாதை இயக்கம்
------

buttham

அது என்ன புத்தத்திற்க்கும் இனப்படுகொலைக்கும் அப்படி ஒரு தொடர்பு.

சமணம்  சார்ந்த அசோகன் கலிங்கம் வென்றான்..
வெட்க்கி தலை குனிந்து மாறினான் புத்த மதத்திற்கு....

புத்தம் சார்ந்த இவனோ ஈழம் வென்றான்... 
திருப்பதி வேறு வந்து சென்றான் ...
எந்த மதத்திற்கு மாறுவானோ?

nivaaranam

இங்கொன்றும் மாட மாளிகைகளும் கூட கோபுரங்களும்  இருந்ததில்லை....
ஆனால் ஒண்டி ஒளியக் குடிசைகளுண்டு
கோழி போல குஞ்சு பொரித்து வாழ்ந்து வந்தோமே ...
அது பொறுக்கவில்லையோ ...

இங்கொன்றும் அறுசுவை உணவளிக்கும் ஆனந்த பவனோ , pizza கார்னெர்-ஒ
இருந்திடவில்லை ....
ஆனால் பிச்சை எடுக்காமல் கூழ் காச்சி உண்டு  வந்தோமே ....
அது பொறுக்கவில்லையோ ....

இங்கொன்றும் சந்தனமரமோ ஜவ்வாதுவோ  இருந்திடவில்லை....
ஆனால் ரத்த வாடை இன்றி வாழ்ந்து வந்தோமே ...
அது பொறுக்கவில்லையோ ......

இங்கொன்றும் நித்தமும் பூபாளம் பாடி பொழுது புலர்ந்ததில்லை.
ஆனால் ஒரு நாளும் ஓராயிரம் மக்களின் ஒருமித்த  
ஒப்பாரி கேட்டு விழித்ததில்லையே....
அது பொறுக்கவில்லையோ .....

இங்கொன்றும் பட்டுடுத்தி  யாரும் வாழ்ந்திடவில்லை.
ஆனால் அரைத்துணி இன்றி அம்மணமாய் அலைந்திட்டோர் யாருமில்லை.
அது பொறுக்கவில்லையோ....

இது ஒன்றும் வேங்கை இல்லா, மான்கள் மட்டுமே  வாழும் பூமி அல்ல.
ஆனால் அளவாய் வேங்கைகளும் ஆங்காங்கே கூட்டமாய் மான்களுமாய்
வாழ்ந்தோமே ....
அது பொறுக்கவில்லையோ .....

யார் வேண்டி போரிட்டாய் வேந்தே ....
புலியா
இல்லை புலியின் பெயரால் தமிழ் இனமா?

நீரொன்றும் கடுவுள்ளில்லை. அது தெரியும் எமக்கு...
ஆனால் செந்நாய் கூட்டமென்று நினைத்திடவில்லை ...

இனி வாழ்ந்து காட்டிட  வழி இல்லை என்று தெரியும் எமக்கு.
ஆனால் செத்திட மாட்டோம் என்றிருந்தோமே
இப்படி எஞ்சி இருந்த நடை பிணங்களுக்கு ஊடே வல்லூறு விட்டு
வேடிக்கை பார்த்தாயே ....
எங்கள் சாவு கூட நல்ல சாவாக இருந்திடப்பொருக்கவில்லையோ உமக்கு.

இதற்கு பிறகும், நீ இட்ட திசை நோக்கி கூட்டம் கூட்டமாய் நடந்தோமே ...
அங்கொன்றும் சொர்க்கம் இருந்திடாதென்று தெரியும் எமக்கு.
ஆனால் மயானக்காடு வாய் பிளந்து காத்திருக்கும் என்று நினைத்திடவில்லையே...

 
இப்போது  அண்டை நாடுகளிடம் எதற்கு கேட்கிறாய் நிவாரண நிதி ?
வாழ்வாதாரம் பாதித்தவனை வாழ்விக்கத்தானே நிவாரணம்.
மயானக்காடுகளை அழகு படுத்தவல்லவே....


Sunday, May 1, 2011

அகதிகள்- 1

... : பாவம் அம்மா... இருந்துட்டு போகட்டுமே. யாருக்கும் தான் தொந்தரவு குடுக்கறது இல்லியே. அதுங்க , கை , கால் வயித்த பாத்தாலே பாவமா இருக்கு. ஒரு வேளை சோத்துக்கே அல்லாடுதுங்க ... பாவம்.


அம்மா... : அதுக்காக ஊருக்குள்ள அங்க அங்க சாக்கட தண்ணியில லேக் கட்டி விட முடியுமா.

... : கரெக்ட் ... முடியாது தான். ஏதோ வாய கட்டி , வயித்த கட்டி , வீடுன்னு ஒன்ன கட்டி வாழ்துற்றுக்கரவங்க நடுவுல போய் இப்பிடி புல் டோசர் விடலாமா

அம்மா : இந்த சொசியலிச்டிக் viewellam வேண்டாம். என்னை கோபபடுத்த வேண்டாம். ஹ்ம்ம் ... ஹ்ம்ம்.. இப்பவே மூச்சு வாங்கறது ....

திருப்பதி போயிட்டு நாளைக்கு சாயங்காலம் வரதுக்குள்ள , எல்லாம் முடிஞ்சு இருக்கணும். இல்லேன்னா என்ன நடக்கும்க்றது நான் சொல்ல வேண்டாம்னு நெனைக்கறேன்.





.... : தெரியும் அம்மா . நான் பாத்துக்கறேன். நீங்க போயிட்டு வாங்க ...

அன்னிக்கு ராத்திரியே மனச கல்லாக்கிகிட்டு , ஒரு வீடு கூட இல்லாம இடிச்சு தர மட்டம் ஆக்கி , எல்லா

பொண்டு போடிசையும் ரோட்டுக்கு கொண்டு வந்து விட்டுடேன்.



கஷ்டமா இருந்தாலும் எனக்கு வேற வழி தெரியல. ஏன்னா இது நான் பண்ணலேன்னா , என் வாழ்க்கை நரகம் ஆயிடும்...



திருப்பதி லேந்து திரும்பி வந்த அம்மாவுக்கு அப்பிடி ஒரு சந்தோஷம்.



சந்தோசத்துல நல்ல சாப்பாடு எல்லாம் ரெடி பண்ணிட்டாங்க.



manasukkulla ஒரு ஓரத்துல சோகம் நெருடினாலும் ,,,

சோத்துக்க்கும் சோகத்துக்கும் சொந்தம் கொஞ்சம் கூட இல்லன்னு யாரோ சொன்னது ஞாபகம் வர , துக்கத்த தூக்குல போட்டு சாக அடிச்சிட்டு

டேபிள்-எ போய் சாப்ட ஒக்கந்தேன்..



அம்மா ...: பக்கத்துக்கு வீட்டுல ஓட்டட குச்சி குடுத்து இருந்தேனே. வாங்கிகிட்டியா ?



.... : வாங்காமையா இவ்ளோ ஒட்டடையும் அடிச்சிருக்கேன் ?

ஒனக்கெல்லாம் சொர்ணாம்பாள்-நு பேர் வச்சதுக்கு பதிலா சொர்ணாக்கா-நு பேர் வெச்சு இருக்கலாம்.



அம்மா: ... ஓட்டட தான அடிச்ச. வீட்டயா இடிச்ச ??



... : பேசாத ... வடைய போடுன்னு சொல்லிக்கிட்டே , டேபிள் -எ ஒரு கானர்ல பாத்தா,,,

ஒரு எட்டு கால் பூச்சி ஏற ட்ரை பண்ணி கிட்டு இருந்துது.



ஒரு பக்கம் வீடு இழந்த துக்கத்தில் எட்டு கால் பூச்சி.

இன்னொரு பக்கம், விக்கி வந்த துக்கத்த , வடை போட்டு அடைச்ச நான்.

.....



Saturday, April 30, 2011

அகதிகள் - 2

stationary ஜாக்கிங் மாதிரி , அந்த எட்டு கால் பூச்சிக்கு எட்டு காலும் அசையுது.


ஆனா ஒரு எட்டு கூட நகரல. .. ஒரு வேளை ஓட்டட குச்சில இருக்கற ஒரு நார் பட்டு ஒரு ரெண்டு மூணு கால் பிராக்ச்சர் ஆயிருக்குமோ என்னவோ .....

இல்ல , அப்படி ஒரு யோகா பண்ணாதான், வாய்லேந்து எச்ச வந்து வீடு கட்ட முடியுமோ என்னவோ ... யார் கண்டா ....

------



நான் ஏன் இப்பிடி ஒரு படுகாளிதனத்த பன்நேங்க்ரதுக்கான பின்னணி இதோ....



போன வருஷம் இப்பிடித்தான் எங்க அண்ணன் ஆறு மாசமா ஓட்டட அடிக்காம டிமிக்கி குடுத்துட்டு இருந்தான்... ஒரு நாள் வேற வழி இல்லாம ஒட்டடையும் அடிச்சிட்டான்... அம்மாவுக்கோ ஆஸ்மா... இவன் ஒழுங்கா அடிக்கரனா இல்லையான்னு பாக்க , அம்மா அப்சர்வ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. அவ்ளோ தான்... அப்சர்வ், சூபர்வைஸ் எல்லாம் பண்ணுவேன்னு சொன்ன அம்மா ,,, கடைசீல , அடுத்த ரெண்டு நாளைக்கு ,, அண்டர் டாக்டர் அப்சர்வேஷன் இன் தி "தெருகோடி ஹோச்பிடல்" ...



விஷயம் முத்தி போக ,, ஆறு மாசமா டேபுடேசன்ல இருந்த எங்க அப்பா இங்க வர மாதிரி ஆயி போய்டுச்சு..



அப்பா : ஏன்டா ,, நான் உங்க அம்மா தொந்தரவு இல்லாம நிம்மதி யா இருக்கறது புடிக்கலியா ,,,, அப்பிடின்னு கத்திகிட்டே ஏதோ சாமி வந்த மாதிரி எங்க அண்ணனா போட்டு மொத்து மொத்துன்னு மொத்திபுட்டாறு.





நான் சும்மா இல்லாம , "இப்பிடி ஆறு மாச ஒட்டடைய ஒரே நாள்ல அடிக்காதடா. அம்மாக்கு ஒண்ணுன்னா , அப்பறம் அப்பா டெல்லி லேந்து வந்துடுவாரு ... அப்பறம் தினம் காலைலஅஞ்சு மணிக்கு எழுந்து படிக்கணும் டான்னு சொன்னேன். இவன்தான் கேக்கல."





அப்பறம் தான் புரிஞ்சுது , நான் இப்ப பண்ணது "சும்மா இருந்த புன்னை சொரிஞ்சதுன்னு" ...அப்பா விஜயகாந்த் ஸ்டைல்-ல பல்ல கடிச்சிக்கிட்டு என் பக்கம் வர ,





"ஆஹா.... இப்ப இங்கிட்டா.... ஆகட்டும்ன்னு சொல்லிகிட்டே குனிஞ்சுகிட்டேன்... ஏன்னா,, கோவத்துல அவர் டார்கெட் மிஸ் ஆயி, நம்ப வாழ்க்கை டார்கெட்டே இல்லாம ஆயிட கூடாது பாருங்க...."





எல்லாம் ஓஞ்சு முடிஞ்சப்பறம் , எங்க அண்ணன் என்னை பாத்து " அப்பிடியே கமல் மாதிரி இருக்கடான்னான்"

... : என்ன நக்கலா ?

அண்ணன் : இல்லைட... உண்மையாலுமே , குருதி புனல் கிளைமாக்ஸ் ல கமல் இப்பிடி தான் கமல் இருப்பான்னான்."



அதுக்கப்பறம் ஒரு மூணு மாசம் , அம்மா அண்டர் டாக்டர் அப்சர்வேஷன் ...

நானும் என் அண்ணனும் அண்டர் அப்பாஸ் கான்ஸ்டன்ட் இண்டர்ரோகேசன்....

பின்ன.... படிச்ச பாடத்துல கேள்வி கேட்டா அது க்விஸ்...

இவுரு ,, படிச்சமா இல்லையாங்கரதயே கேள்வியா கேட்டா அது இண்டர்ரோகேசன் இல்லாம .....

கிட்ட திட்ட மூணு மாசம் , தினம் அஞ்சு மணிக்கு எழுந்து படிச்சே ஆகணும். அது வரைக்கும் அஞ்சு மணி ன்ற ஒன்னு காலைல கிடையாதுன்னு நெனைச்சிட்டு இருந்த எனக்கு அந்த சம்பவம் ஒரு பேர் இடியாவே இருந்துச்சு.

இதுல பல நாள் , அஞ்சு மணிக்கு அலாரம் வேச்சுட்டியான்னு , நைட் ஒரு மணி லேந்து , நாலு மணி வரைக்கும் , ஒரு அவர்க்கு ஒரு தடவை , என்னை தூக்கதுலேந்து எழுப்பி கேப்பாரு...

பரவா இல்லியே ... நாலு டு அஞ்சு சும்மா விட்டுடுவாரோன்னு நீங்க நெனைக்கலாம்.

நோ. .. நாலு டு அஞ்சு , paththu நிமிஷத்துக்கு ஒரு வாட்டி ....

அந்த கஷ்ட்ட காலம் முடிஞ்சு இப்பதான் திரும்பி ஒரு எட்டு மாசம் வேலைக்காக கோவா போயிருக்காரு...

டெல்லி லேந்து திரும்பி வந்ததுக்கே , நானும் என் அண்ணனும் என்ன பாடு பட்டோம் ங்கறது , எங்களுக்கு தான் தெரியும்.

கோவா-லேந்து வர வெச்சா , ரெண்டு பத்தாதுன்னு, புதுசா ஒரு புள்ளைய தத்து எடுத்து கூட அடிப்பாரு....

அதனால. ஓட்டட தான ... அடிச்சுருவோம்னு , அடிச்சிட்டேன்....

.....











Monday, January 3, 2011

ராஜா

டக் டக் டம் டம் .....
கதவை திறந்துகிட்டு லுங்கியோட வரார் மினிஸ்டர்.
யார் நீங்க ... என்ன வேணும் ...
நாங்க சிபிஐ -லேந்து வரோம். உங்க வீட்டை சர்ச் செய்ய ஆர்டர் இதோ....
தயவு செய்து கோ-ஆபெரய்ட் பண்ணுங்க.
வெல வெலத்துபோன மினிஸ்டர், போன் பக்கம் போக,.....
"சார், போன் எல்லாம் அல்ரியாடி டிஸ்கன்னேக்ட் செய்தாச்சு ...."
...
....
கொஞ்ச நேரம் கழிச்சு , ஏதோ ஒரு போன் கால் வர, சிபிஐ அதிகாரி போன் எடுத்து
"ஓகே. எல்லா எடத்துலயும் ஆச்சா ..."
"பெரம்பலூர், டெல்லி .,, அந்த அம்மா வீடு.... " ... "அப்பிடியா ..."
"இங்க இன்னும் ஒரு மணி நேரத்துல முடிஞ்சுரும் "....
நம்ப என்ன சார் பண்றது. நம்ப கடமையா செய்து தான ஆகணும்.
...
cbi : தேங்க்ஸ் பார் தி கோ-operation. நாங்க வரோம்.
.....
யோ. yaaravadhu phone-a kudungappa....
"hello. Thalaivarae . Naan raja பேசறேன் ".
"வீட்டுக்கு சிபிஐ raid vandhuduchu. thalaivaa "
Thalaivar : oozhal nadandhu 6 maasam achu. Eppa kaettallum, ella document-ayum எரிச்சு போட்டுட்டேன்னு சொன்ன.
இப்ப அவனுங்க வந்து ஒரு லாரி டாகுமென்ட் கொட்டீட்டு போய் இருக்கானுங்க .
என்னை கேவலமா பேசராங்கய்யா ...
அடுத்த முறை இது மாதிரி நடந்தா பணம் கொஞ்சம் ஜாஸ்தியா ஆகும்-ன்னு warn பண்ணீட்டு போறாங்கய்யா .....