Sunday, May 1, 2011

அகதிகள்- 1

... : பாவம் அம்மா... இருந்துட்டு போகட்டுமே. யாருக்கும் தான் தொந்தரவு குடுக்கறது இல்லியே. அதுங்க , கை , கால் வயித்த பாத்தாலே பாவமா இருக்கு. ஒரு வேளை சோத்துக்கே அல்லாடுதுங்க ... பாவம்.


அம்மா... : அதுக்காக ஊருக்குள்ள அங்க அங்க சாக்கட தண்ணியில லேக் கட்டி விட முடியுமா.

... : கரெக்ட் ... முடியாது தான். ஏதோ வாய கட்டி , வயித்த கட்டி , வீடுன்னு ஒன்ன கட்டி வாழ்துற்றுக்கரவங்க நடுவுல போய் இப்பிடி புல் டோசர் விடலாமா

அம்மா : இந்த சொசியலிச்டிக் viewellam வேண்டாம். என்னை கோபபடுத்த வேண்டாம். ஹ்ம்ம் ... ஹ்ம்ம்.. இப்பவே மூச்சு வாங்கறது ....

திருப்பதி போயிட்டு நாளைக்கு சாயங்காலம் வரதுக்குள்ள , எல்லாம் முடிஞ்சு இருக்கணும். இல்லேன்னா என்ன நடக்கும்க்றது நான் சொல்ல வேண்டாம்னு நெனைக்கறேன்.





.... : தெரியும் அம்மா . நான் பாத்துக்கறேன். நீங்க போயிட்டு வாங்க ...

அன்னிக்கு ராத்திரியே மனச கல்லாக்கிகிட்டு , ஒரு வீடு கூட இல்லாம இடிச்சு தர மட்டம் ஆக்கி , எல்லா

பொண்டு போடிசையும் ரோட்டுக்கு கொண்டு வந்து விட்டுடேன்.



கஷ்டமா இருந்தாலும் எனக்கு வேற வழி தெரியல. ஏன்னா இது நான் பண்ணலேன்னா , என் வாழ்க்கை நரகம் ஆயிடும்...



திருப்பதி லேந்து திரும்பி வந்த அம்மாவுக்கு அப்பிடி ஒரு சந்தோஷம்.



சந்தோசத்துல நல்ல சாப்பாடு எல்லாம் ரெடி பண்ணிட்டாங்க.



manasukkulla ஒரு ஓரத்துல சோகம் நெருடினாலும் ,,,

சோத்துக்க்கும் சோகத்துக்கும் சொந்தம் கொஞ்சம் கூட இல்லன்னு யாரோ சொன்னது ஞாபகம் வர , துக்கத்த தூக்குல போட்டு சாக அடிச்சிட்டு

டேபிள்-எ போய் சாப்ட ஒக்கந்தேன்..



அம்மா ...: பக்கத்துக்கு வீட்டுல ஓட்டட குச்சி குடுத்து இருந்தேனே. வாங்கிகிட்டியா ?



.... : வாங்காமையா இவ்ளோ ஒட்டடையும் அடிச்சிருக்கேன் ?

ஒனக்கெல்லாம் சொர்ணாம்பாள்-நு பேர் வச்சதுக்கு பதிலா சொர்ணாக்கா-நு பேர் வெச்சு இருக்கலாம்.



அம்மா: ... ஓட்டட தான அடிச்ச. வீட்டயா இடிச்ச ??



... : பேசாத ... வடைய போடுன்னு சொல்லிக்கிட்டே , டேபிள் -எ ஒரு கானர்ல பாத்தா,,,

ஒரு எட்டு கால் பூச்சி ஏற ட்ரை பண்ணி கிட்டு இருந்துது.



ஒரு பக்கம் வீடு இழந்த துக்கத்தில் எட்டு கால் பூச்சி.

இன்னொரு பக்கம், விக்கி வந்த துக்கத்த , வடை போட்டு அடைச்ச நான்.

.....



1 comment:

R. Gopi said...

நல்லா இருக்கு. இன்னும் கொஞ்சம் தெளிவா எழுதுங்க